தாராபுரம் அருகே சாலையோர கடைகளில் முறைகேடாக ஆக்கிரமிப்பு கட்டணம் வசூல் - விவசாயிகள் சங்கம் புகார்

தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் சாலையோர கடைகள் வைத்துள்ளவர்களிடம் முறைகேடாக ஆக்கிரமிப்பு கட்டணம் வசூலித்த நபர்களை கைது செய்யக்கோரி, கோட்டாட்சியரிடம் தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மனு.


திருப்பூர்: தாராபுரம் - பொள்ளாச்சி சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளவர்களிடம் முறைகேடாக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.



தாராபுரம் தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவர் உட்பட பத்துக்கு மேற்பட்ட நிர்வாகிகள் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியரிடம் இன்று புகார் மனு ஒன்றை வழங்கினர்.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,

தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பொள்ளாச்சி சாலையில் நகராட்சி மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது.

இந்நிலையில், பள்ளிக்கு அருகே சாலையை ஆக்கிரமித்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக சுமார் 50க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து நடவடிக்க எடுக்க வேண்டும் என நகராட்சி ஆணையரிடம் தொலைபேசி மூலம் புகார் அளித்த நிலையில், அதுகுறித்து தமக்கு எதுவும் தெரியாது எனக்கூறிவிட்டு, யாரிடம் வேண்டுமானாலும் சென்று சொல்லுங்கள் என பொறுப்பற்ற முறையில் பதிலளித்துள்ளார்.

நகராட்சி ஆணையாளரின் செயல் மற்றும் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சாலையோர கடைகளில் நாள்தோறும் ஆக்கிரமிப்பு கட்டணமாக 100 ரூபாய் வசூல் செய்வது யார் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார் அளிக்க சென்ற தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுப்பிரமணியம் நகர தலைவர் ராசு, உழவர் உழைப்பாளர் கட்சியின் மாவட்ட தலைவர் அலங்கியம் ஈஸ்வரமூர்த்தி உட்பட சங்கத்தின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...