ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் 2வது நாளாக உள்ளிருப்புப் போராட்டம் - கோவை அரசு மருத்துவமனை முதல்வர் பேச்சுவார்த்தை!

ஊதியம் உயர்வு கோரி போராடி வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், தங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாகவும், காவல்துறையை அணுக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா பேச்சு.



கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கிரிஸ்டல் என்ற ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் பணியாமர்த்தப்பட்ட பணியாளர்கள் 2வது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



இது குறித்துப் பேசிய கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் நிர்மலா, நேற்று காலையில் இருந்து எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களை வைத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் அவர்கள் அவர்களது கோரிக்கைகளில் உறுதியாக உள்ளனர். காவல்துறையினரை அணுக வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ள சம்பள உயர்வுக்கும் அரசு மருத்துவமனைக்கும் சம்பந்தம் இல்லை. அந்த சம்பளத்தை கிறிஸ்டல் நிறுவனம் தான் வழங்க வேண்டும். கிறிஸ்டல் நிறுவனத்தினரை அழைத்துள்ளோம். அவர்கள் வந்தபின் அவர்களுடன் இணைந்து பேச்சு வார்த்தை நடத்தி முடிவு எட்டப்படும், என்றார்.

வட மாநில தொழிலாளர்கள் புதிதாக வேலைகளுக்கு அழைத்து வரப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் நிர்மலா, வட மாநில தொழிலாளர்கள் தென் மாநில தொழிலாளர்கள் என தற்பொழுது நாம் பிரித்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...