தாராபுரத்தில் தனியார் கல்லூரி சார்பில் மரம் நடும் விழா

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள பிஷப் தார்ப் கல்லூரி மற்றும் டாஸ் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற மரம் நடும் விழாவில் பல்வேறு வகையிலான 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தனியார் கல்லூரி மற்றும் தொண்டு நிறுவனம் சார்பில் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

தாராபுரத்தில் உள்ள பிஷப் தார்ப் கல்லூரியில், டாஸ் அறக்கட்டளை மற்றும் பிஷப் தார்ப் கல்லூரி இணைந்து கல்லூரி வளாகத்தில், முதல்வர் முனைவர் விக்டர் லாசரஸ் தலைமையில், மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், சி.எஸ்.ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மோகன் குமார் மற்றும் சி.எஸ்.ஐ பெண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஹெலின் பிரேமாகுமாரி ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வாழ்த்துரை வழங்கினர்.

மேலும் இதில் டாஸ் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் சாய் பிரசாந்த், பொதுச் செயலாளர் அருண்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரம் நடுதல் முக்கியத்துவம் குறித்தும் மரம் நன்மையையும், சுற்றுச்சூழலையும் எவ்வாறு பாதுகாக்கிறது என்பதை மாணவ மாணவிகளிடையே எடுத்துரைத்தனர்.



திருச்சி டாஸ் அறக்கட்டளை குழுவினர் பிஷப் தார்ப் கல்லூரி மாணவ மாணவிகள், பெற்றோர்கள், மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு 500க்கு மேற்பட்ட பல்வேறு விதமான மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.



இதில் மகாகனி, நாவல், எழிலைப்பாலை, நீர் மருது, மகிழும், கொன்றை, வாகை, அத்தி, நகாமரம், வாதாம், செம்மரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.



மேலும் இந்நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வர் பிரேம்நாத், சமூக சேவகர் டாக்டர் சிவசங்கர் ஜெகதீஷ் பாபு, நாட்டு நலப்பணி அலுவலர் ராஜேஷ், நளினி ஜெயக்குமாரி, ஏஞ்சலின் பிரபா மற்றும் மாணவ மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...