கோவை கோனியம்மன் கோவில் மாசி தேரோட்ட விழாவிற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் - எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

கோவை மக்களின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் மாசி தேரோட்ட விழாவிற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.


கோவை: கோவை கோனியம்மன் கோவில் மாசி தேரோட்ட விழாவின் போது உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.



இது தொடர்பாக பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோவை மாநகரின் 'காவல் தெய்வம்' என்றழைக்கப்படும் அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில், கோவை மாநகரின் மையப் பகுதியான டவுன்ஹால், மணிக்கூண்டு அருகே அமைந்துள்ளது.

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள இத்திருக்கோயில், கோவை மாநகர மக்களின் உணர்வுகளோடு கலந்துவிட்ட திருக்கோயில். கோவை மாநகரமே இத்திருக்கோயிலை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அருள்மிகுகோனியம்மனை தரிசிக்க வந்து செல்கின்றனர்.

இத்திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும், மாசி மாதம் நடைபெறும் திருத்தேரோட்டம், மிகமிக முக்கியமான திருவிழாவாகும். லட்சக்கணக்கான மக்கள் இந்த திருவிழாவுக்கு வருவார்கள்.

எனவே அருள்மிகு கோனியம்மன் திருத்தேரோட்டம் நடக்கும் நாளன்று கோவை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விட வேண்டும் என்று கோவை மாநகர மக்களும், அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் பக்தர்களும், கோவை மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதனை ஏற்று, அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் மாசி தேரோட்டத்தின் போது, கோவை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும்.



இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், கோவை மாவட்ட ஆட்சித் தலைவரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...