உதகையில் 2ம் கட்ட புதுமைப்பெண் திட்டம் தொடக்கம் - மாணவியருக்கு ஏ.டி.எம் கார்டுகள் விநியோகம்!

நீலகிரி மாவட்டம் உதகையில் 2-ஆம் கட்ட புதுமை பெண் திட்டம் தொடங்கப்பட்டு, 165 மாணவியருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி தொகை வழங்குவதற்கான ஏ.டி.எம். கார்டுகள் விநியோகிக்கப்பட்டன.



நீலகிரி: நீலகிரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி திட்டத்தின் கீழ்அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் இரண்டாம் கட்ட திட்டத்தினைஆட்சியர் அம்ரித் தொடங்கி வைத்தார்.



அதன் ஒரு பகுதியாக, மாணவிகளுக்கு வங்கி ஏ.டி.எம் கார்டு (பற்று அட்டை)களை வழங்கிய ஆட்சியர் அம்ரித், புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் மாணவிகளுக்கு திட்ட கையேடுகள் மற்றும் வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்.



நிகழ்ச்சியில், நகர்மன்ற தலைவர்கள் வாணீஸ்வரி (உதகை), பரிமளா (கூடலூர்), ஊராட்சி ஒன்றியத்தலைவர்கள் மாயன்(எ) மாதன் (உதகை), சுனிதாநேரு (குன்னூர்), கீர்த்தனா (கூடலூர்), உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மனோகரி,



மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, உதகை நகராட்சி ஆணையாளர் காந்திராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியராஜா, உதகை வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...