உதகையில் 2ம் கட்ட புதுமைப்பெண் திட்டம் தொடக்கம் - மாணவியருக்கு ஏ.டி.எம் கார்டுகள் விநியோகம்!

நீலகிரி மாவட்டம் உதகையில் 2-ஆம் கட்ட புதுமை பெண் திட்டம் தொடங்கப்பட்டு, 165 மாணவியருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி தொகை வழங்குவதற்கான ஏ.டி.எம். கார்டுகள் விநியோகிக்கப்பட்டன.



நீலகிரி: நீலகிரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி திட்டத்தின் கீழ்அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் இரண்டாம் கட்ட திட்டத்தினைஆட்சியர் அம்ரித் தொடங்கி வைத்தார்.



அதன் ஒரு பகுதியாக, மாணவிகளுக்கு வங்கி ஏ.டி.எம் கார்டு (பற்று அட்டை)களை வழங்கிய ஆட்சியர் அம்ரித், புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் மாணவிகளுக்கு திட்ட கையேடுகள் மற்றும் வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்.



நிகழ்ச்சியில், நகர்மன்ற தலைவர்கள் வாணீஸ்வரி (உதகை), பரிமளா (கூடலூர்), ஊராட்சி ஒன்றியத்தலைவர்கள் மாயன்(எ) மாதன் (உதகை), சுனிதாநேரு (குன்னூர்), கீர்த்தனா (கூடலூர்), உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மனோகரி,



மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, உதகை நகராட்சி ஆணையாளர் காந்திராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியராஜா, உதகை வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...