குன்னூர் அருகே சாலையில் நடந்து சென்ற நபர், தடுமாறி அரசு பேருந்தில் சிக்கி உயிரிழந்த சோகம்

குன்னூர் - ஒட்டுப்பட்டரை சாலையில் நடந்து சென்ற பத்திர விற்பனையக உரிமையாளர் முகமது கனி, கால் தடுமாறி சாலையில் விழுந்த நிலையில் அவ்வழியாக குன்னூர் நோக்கி சென்ற அரசு பேருந்து அவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சாலையில் நடந்து சென்ற நபர், தடுமாறி விழுந்து அரசு பேருந்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குன்னூரில் பத்திர விற்பனையகம் நடத்தி வருபவர் முகமது கனி. இவர், குன்னூர் தாலுக்கா அலுவலகம், நீதிமன்றம், காவல்நிலையம் செல்லக்கூடிய மக்கள் அதிகம் பயணிக்கும் பிரதான சாலையில் உள்ள பத்திர விற்பனையகத்திற்கு நடந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், சாலையோரத்தில் இருந்த கேபிள் முகமது கனியின் காலில் சிக்கியதில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.



அப்போது, அவ்வழியே குன்னூர் நோக்கி வந்த அரசு பேருந்தின் பின் சக்கரம் அவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குன்னூர் நகர போலீசார், முகமது கனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...