குன்னூர் அருகே சாலையில் நடந்து சென்ற நபர், தடுமாறி அரசு பேருந்தில் சிக்கி உயிரிழந்த சோகம்

குன்னூர் - ஒட்டுப்பட்டரை சாலையில் நடந்து சென்ற பத்திர விற்பனையக உரிமையாளர் முகமது கனி, கால் தடுமாறி சாலையில் விழுந்த நிலையில் அவ்வழியாக குன்னூர் நோக்கி சென்ற அரசு பேருந்து அவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சாலையில் நடந்து சென்ற நபர், தடுமாறி விழுந்து அரசு பேருந்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குன்னூரில் பத்திர விற்பனையகம் நடத்தி வருபவர் முகமது கனி. இவர், குன்னூர் தாலுக்கா அலுவலகம், நீதிமன்றம், காவல்நிலையம் செல்லக்கூடிய மக்கள் அதிகம் பயணிக்கும் பிரதான சாலையில் உள்ள பத்திர விற்பனையகத்திற்கு நடந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், சாலையோரத்தில் இருந்த கேபிள் முகமது கனியின் காலில் சிக்கியதில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.



அப்போது, அவ்வழியே குன்னூர் நோக்கி வந்த அரசு பேருந்தின் பின் சக்கரம் அவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குன்னூர் நகர போலீசார், முகமது கனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...