எங்களுக்கு ஒளி பிறந்திருக்கின்றது -அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

எங்களுக்கு ஒளி பிறந்திருக்கின்றது என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கருத்து.


ஈரோடு: ஈரோட்டில் ஒளிரும் ஈரோடு அமைப்பினருடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் ஈரோட்டில் முகாமிட்டிருக்கின்றனர். கட்சித் தொண்டர்களை சந்திப்பது, ஆதரவு அமைப்புகளை சந்திப்பது, வாக்காளர்களைச் சந்திப்பது என ஈரோடு இடைத்தேர்தல் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கின்றன.

ஒருபுறம் பிரச்சாரம் சென்றாலும், மறுபுறம் ஒபிஎஸ், இபிஎஸ் அதிமுக தலைமை கைப்பற்றுவது குறித்த விவகாரம் பெரும் விவாதத்தினை எழுப்பின. இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவது குறித்து எடப்பாடி அணிக்கும், பன்னீர்செல்வம் அணிக்கும் இடையே சிக்கல் நீடித்தன.

பரபரப்புக்குப் பஞ்சமில்லாத தேர்தல் களத்தில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவதாக ஓபிஎஸ் அணி அறிவித்திருக்கின்றது.

இதனால் எடப்பாடி அணி வேட்பாளர் தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் களமிறங்குகின்றார்.



இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஒளிரும் ஈரோடு அமைப்பினருடன் கலந்துரையாடினார்.

இதில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எங்களுக்கு ஒளி பிறந்துள்ளது, ஓபிஎஸ் வேட்பாளரை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார். அனைவருக்கும் நன்றி எனத் தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...