எங்களுக்கு ஒளி பிறந்திருக்கின்றது -அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

எங்களுக்கு ஒளி பிறந்திருக்கின்றது என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கருத்து.


ஈரோடு: ஈரோட்டில் ஒளிரும் ஈரோடு அமைப்பினருடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் ஈரோட்டில் முகாமிட்டிருக்கின்றனர். கட்சித் தொண்டர்களை சந்திப்பது, ஆதரவு அமைப்புகளை சந்திப்பது, வாக்காளர்களைச் சந்திப்பது என ஈரோடு இடைத்தேர்தல் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கின்றன.

ஒருபுறம் பிரச்சாரம் சென்றாலும், மறுபுறம் ஒபிஎஸ், இபிஎஸ் அதிமுக தலைமை கைப்பற்றுவது குறித்த விவகாரம் பெரும் விவாதத்தினை எழுப்பின. இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவது குறித்து எடப்பாடி அணிக்கும், பன்னீர்செல்வம் அணிக்கும் இடையே சிக்கல் நீடித்தன.

பரபரப்புக்குப் பஞ்சமில்லாத தேர்தல் களத்தில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவதாக ஓபிஎஸ் அணி அறிவித்திருக்கின்றது.

இதனால் எடப்பாடி அணி வேட்பாளர் தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் களமிறங்குகின்றார்.



இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஒளிரும் ஈரோடு அமைப்பினருடன் கலந்துரையாடினார்.

இதில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எங்களுக்கு ஒளி பிறந்துள்ளது, ஓபிஎஸ் வேட்பாளரை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார். அனைவருக்கும் நன்றி எனத் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...