சிறைக்காவலர், தீயணைப்பு வீரர்கள், 2ம்நிலை காவலர் பணிக்கு உடல்தகுதித் தேர்வு - கோவையில் ஆண்கள், பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!

கோவையில் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் காலியாகவுள்ள சிறை காவலர், தீயணைப்பு வீரர்கள், 2 ஆம் நிலை காவலர் பணியிடங்களுக்கான உடல் தகுதித் தேர்வு இன்று நடைபெற்றது.



கோவை: தமிழகம் முழுவதும் 3,552 சிறைக்காவலர், தீயணைப்பு வீரர்கள், 2ம்நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் எழுத்து தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல் தகுதி தேர்வு கோவையில் இன்று காலை நடைபெற்றது.



இதில் பங்கேற்குமாறு மேற்கு மண்டலத்தை சேர்ந்த 548 பெண்களுக்கும், 623 ஆண்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.



கோவை பிஆர்எஸ் மைதானத்தில் ஆண்களுக்கும், நேரு ஸ்டேடியத்தில் பெண்களுக்கும் உடற்தகுதித் தேர்வு நடத்தப்பட்டது.



இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உயரம் சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன.



நேரு ஸ்டேடியத்தில் நடந்த தேர்வுக்கு இன்று 300 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், 185 பெண்கள் இன்று கலந்துகொண்டனர்.



இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் உயரம் அளத்தல் போன்றவை இன்று மேற்கொள்ளப்பட்டது.



இதேபோல், பி.ஆர்.எஸ் மைதானத்தில் ஆண்களுக்காக நடத்தப்பட்ட தேர்வில் இன்று 400 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்த நிலையில், 316 பேர் மட்டுமே பங்கேற்றனர்.



இவர்களுக்கும் சான்றிதழ் சரிபார்த்தல் உயரம் மற்றும் உடல் அளவு அளத்தல், 1500 மீட்டர் உடல் தகுதி ஓட்டம் ஆகியவை நடத்தப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...