பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் பொம்மலாட்டம் - ஆர்வத்துடன் கண்டுகளித்த திருப்பூர் மாணவிகள்!

திருப்பூரில் உள்ள பழனியம்மாள் அரசுப்பள்ளியில் வளரிளம் பெண்களின் தொடர் கல்வியின் அவசியம் குறித்து மாணவிகளுக்கு பொம்மலாட்டத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு பொம்மலாட்ட நிகழ்ச்சியை ஏராளமான மாணவிகள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.



சமூக கல்வி மற்றும் முன்னேற்ற மையம், பொம்மலாட்ட கலைக்குழுவினர் சார்பில், வளரிளம் பெண்களின் தொடர் கல்வி மற்றும் பாதுகாப்பை எடுத்துரைக்கும் விதமாக பொம்மலாட்ட கலைப்பயணம் திருப்பூரில் இன்று தொடங்கியது. இந்த கலைப் பயணமானது, வரும் 12ஆம் தேதி தேனியில் நிறைவடைய உள்ளது.

இதில் திருப்பூர், கோவை, ஈரோடு, திண்டுக்கல், தேனி போன்ற தொழில் நகரங்களில் பள்ளி விடுமுறை நாட்களில் ஆடை உற்பத்தி தொடர்பான பல்வேறு வேலைகளுக்கு வளரிளம் பருவத்தினர் சென்று வருகின்றனர்.



இதனால், பள்ளி இடை விலகல் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் விதமாக, திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற பொம்மலாட்ட நிகழ்ச்சியின் மூலம் மாணவிகளுக்கு கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



இந்த பொம்மலாட்ட நிகழ்ச்சியை, ஏராளமான மாணவிகள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...