கோவை துடியலூர் அருகே சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை - ஒருவர் கைது

துடியலூர் அடுத்த வெள்ளக்கிணர் பிரிவு பகுதியில் அரசு மதுபானங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தவரை கைது செய்த போலீசார் 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகே அரசு மதுபானங்களை பதுக்கி சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசு மதுபானங்களைப் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக துடியலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் பேரில் துடியலூர் காவல் உதவி ஆய்வாளர் குருச்சந்திர வடிவேல் தலைமையில் போலீசார் வெள்ளக்கிணர் பிரிவு பகுதியில் உள்ள டாஸ்மாக் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்குள்ள புதர் பகுதியில் அரசு மதுபானங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வந்த அதே பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரை கைது செய்தனர்.

மேலும் அவரிடமிருந்து 20 மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...