கோவை மாவட்டத்தின் 183வது ஆட்சித்தலைவராக கிராந்திகுமார் பாடி இன்று பொறுப்பேற்பு

கோவை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று கொண்ட கிராந்தி குமார் பாடி, அரசின் திட்டங்கள், அரசின் உதவிகளை மக்களிடம் கொண்டு சேர்க்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.



கோவை: கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்ட கிராந்திகுமார் பாடி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.



கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜி.எஸ்.சமீரன் சென்னைக்கு மாற்றப்பட்டார். இதனைதொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியராக கிராந்திகுமார் பாடி நியமிக்கப்பட்டார்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொறுப்பேற்பு நிகழ்ச்சியில் ஏற்கனவே கோவை மாவட்ட ஆட்சியராக இருந்து சமீரன், கிராந்திகுமார் பாடியிடம் கோப்புகளை ஒப்படைத்தார். அந்த கோப்புகளில் கையெழுத்திட்டு கிராந்திகுமார் பாடி கோவை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.



இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கோவை மாவட்டத்தில் அரசு திட்டங்கள், அரசு உதவிகள் அனைத்தையும் மக்களிடம் உடனடியாக கொண்டு சேர்க்கவும், மக்களின் குறைகளை தீர்க்கவும், மாவட்டத்தின் உட்கட்டமைப்புகள், அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கைகள் எடுப்பேன்.

அனைத்து துறைகளில் இருக்கின்ற முதன்மை திட்டங்கள் குறித்து முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். களத்திற்கு சென்று அனைத்து அரசு திட்டங்களையும் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

2015ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்ற கிராந்திகுமார் பாடி, இதற்கு முன்னதாக திருப்பூர் மாநகராட்சி ஆணையாளராக இருந்துள்ளார். அதற்கும் முன்பு நாமக்கல் மாவட்டத்தில் உதவி ஆட்சியராகவும் பணியாற்றி உள்ளார்.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் கமர்சியல் டாக்ஸ் மற்றும் ஜி.எஸ்.டி யில் இணை ஆணையாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக பொறுப்பேற்ற கிராந்திகுமார் பாடி, கோவை மாவட்டத்தின் 183வது ஆட்சித்தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...