வால்பாறை அருகே அடையாளம் தெரியாத வாகனத்தில் சிக்கி உயிரிழந்த நீல வால் கருமந்தி

வால்பாறை அருகே சோலையாறு அணை செல்லும் சாலையில் அடையாளம் தெரியாத வாகனத்தில் சிக்கி நீலவால் கருமந்தி உயிரிழந்த நிலையில், வாகனங்கள் கவனமாக செல்லும்படி வனத்துறை எச்சரிக்கை.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே அடையாளம் தெரியாத வாகனத்தில் சிக்கி நீலவால் கருமந்தி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை பகுதியில் வன விலங்குகள் அதிகம் உள்ளன. இதில் அரிய வகையான சிங்கவால் குரங்கு உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதனை தனியார் தொண்டு நிறுவனங்களும், தன்னார்வலர்களும், வனத்துறையினரும் பாதுகாத்து வருகின்றனர்.



இதனிடையே, வால்பாறையிலிருந்து சோலையார் அணை செல்லும் வழியில் சேடல் அனை அண்ணா நகர் பகுதியில் சாலையை கடக்க வந்த நீல வால் கருமந்தி, அடையாளம் தெரியாத வாகனத்தில் சிக்கி அடிபட்டு இறந்து கிடந்துள்ளது.



இதை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கண்டு அதிர்ச்சி அடைந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் நீலவால் கருமந்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர்.

இந்நிலையில், வால்பாறை வனப்பகுதி சாலையில் வாகனங்கள் வரும் பொழுது மெதுவாகவும் கவனமாகவும் செல்லும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...