மாய குரல் மறைந்தது..! - பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய பின்னணி பாடகி வாணி ஜெயராம், இன்று சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், இசை ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


சென்னை: பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) சென்னையில் காலமானார். அவரது மறைவு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



“மல்லிகை என் மன்னன் மயங்கும்” என்ற தனது முதல் பாடலிலேயே அனைவரையும் மயங்க வைத்த மாய குரல் வாணி ஜெயராமின் குரல் தான். ஆம் தனது முதல் பாடலிலேயே தமிழ் நெஞ்சங்களை காதல் கொள்ள வைத்து முன்னணி பாடகியாக வலம் வந்தார்.

அதன் பின்னர், ஏழு சுவரங்களுக்குள், ௭ன்னுள்ளே ௭ங்கும் ஏங்கும் கீதம், கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம் போன்ற பாடல்களால் பல்வேறு உணர்வுகளை கடத்தியது என்றால் அது மிகையல்ல...

கடந்த 1971-ஆம் ஆண்டு இந்தியில் வெளியான 'குட்டி' என்ற படத்தில் இடம்பெற்ற 'போலே ரே பப்பி ஹரா' என்ற பாடலை பாடி சினிமாவில் அறிமுகமான இவர், அடிப்படையில் ஒரு தமிழ் பாடகி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியில் பிரபலமான பாடகியாக மாறிய வாணி ஜெயராம், தமிழ் திரையுலகில் முதன்முதலாக 1974ஆம் ஆண்டு “தீர்க்கசுமங்கலி” ௭ன்ற திரைப்படத்தில் கவிஞர் வாலி எழுதிய “மல்லிகை ௭ன் மன்னன் மயங்கும்” பாடல் மூலமாக அறிமுகமானார்.

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் பின்னணி பாடல்கள் மூலம் இந்திய இசையுலகில் தவிர்க்க முடியாத குரலாக திகழ்ந்த வாணி ஜெயராம். தனது இனிமையான குரலால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.



வாணி ஜெயராம், சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதையும், பல்வேறு மாநில விருதுகளை பெற்றுள்ளார். சமீபத்தில் அவருக்கு பத்ம பூஷன் விருதும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வாணி ஜெயராம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இன்று அவரது வீட்டில் வேலை செய்யும் பெண், வீட்டுக்கு வந்து கதவை தட்டிய போது கதவை திறக்க வில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகத்தின் பேரில் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, வாணி ஜெயராம் தலையில் அடிப்பட்ட நிலையில் கிடந்துள்ளார்.

அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் கொண்டு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியதாக தெரிவித்துள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...