மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம் - மரக்கன்றுகள் நடுதல், கண்காட்சியுடன் நிறைவு!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் மாநிலத் திட்டக்குழுவின் தமிழ்நாடு மாநில நில பயன்பாட்டு ஆய்வு வாரியம் இணைந்து நடத்திய 2 நாள் சர்வதேச கருத்தரங்கு நேற்றுடன் நிறைவடைந்தது.



கோவை: மாநில திட்டக்குழுவின்‌ தமிழ்நாடு மாநில நில பயன்பாட்டு ஆய்வு வாரியம்‌ மற்றும்‌ மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம் ஆகியவை இணைந்து ஊடுருவிய மரத்தாவரங்களின்‌ மேலாண்மை பற்றிய 2 நாள் சர்வதேச கருத்தரங்கை நடத்தியது. கடந்த 2ம் தேதி தொடங்கிய இந்தக் கருத்தரங்கின் 2வது நாள் நிகழ்வானது மரக்கன்றுகள்‌ நடுதலுடன் தொடங்கியது.

மாநில திட்டக்குழு துணைத்‌ தலைவர்‌ டாக்டர்‌. ஜெ. ஜெயரஞ்சன்,‌ மேட்டுப்பாளையம் வனக்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் வன ஆக்கிரமிப்பு இனங்களால் செய்யப்பட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களின் கண்காட்சியை பார்வையிட்டார்.

இதனை ‌பயிலரங்கில் பங்கேற்ற பிரதிநிதிகள் அனைவரும் பார்வையிட்டனர். தொழில்நுட்ப அமர்வுகளில்‌, மதிப்பு கூட்டல்‌ மற்றும்‌ வாழ்வாதார வாய்ப்புகள்‌ மற்றும்‌ கொள்கை மற்றும்‌ சட்டச் சிக்கல்கள்‌ போன்றவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்த குழு விவாதத்திற்கு மாநில திட்டக்குழு உறுப்பினர்கள்‌ பேராசிரியர்‌ விஜயபாஸ்கர்‌, பேராசிரியர்‌ சுல்தான்‌ அகமது ஆகியோர்‌ தலைமை வகித்தனர்‌. இதில் பங்கேற்ற வனவியல் கல்லூரி டீன் பார்த்திபன்,‌ வன ஆக்கிரமிப்பு உயிரினங்களின்‌ மேலாண்மை என்ற தலைப்பிலான பயிலரங்கின் முக்கிய விஷயங்களை சுருக்கமாக எடுத்துரைத்தார்.



தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர்‌ வெ. கீதாலட்சுமி சிறப்புரையாற்றினார். அதில், சுற்றுச்சூழல்‌ மற்றும்‌ அதனுடன்‌ தொடா்புடைய சமூகவியல்‌ தாக்கங்களைக்‌ கருத்தில்‌ கொண்டு வன ஆக்கிரமிப்பு உயிரினங்களை நிர்வகிப்பதற்கான உத்திகள்‌ மற்றும்‌ வழிகாட்டுதல்கள் குறித்து எடுத்துரைத்தார்.

மாநில திட்டக்‌ கமிஷன்‌ துணைத்‌ தலைவர்‌ டாக்டர்‌. ஜே. ஜெயரஞ்சன்,‌ வன ஆக்கிரமிப்பு உயிரினங்களை நிர்வகித்தல்‌ என்ற தலைப்பில்‌ இரண்டு நாள் பயிலரங்கை வெற்றிகரமாக நடத்தியதற்காக அமைப்பாளர்களைப் பாராட்டினார்‌.

வன ஆக்கிரமிப்பு இனங்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக திறம்பட மாற்றியதற்காக தொழில்முனைவோரையும்‌, வனஆக்கிரமிப்பு இனங்கள்‌ குறித்த ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளுக்காக ஆராய்ச்சி அறிஞர்களையும்‌ அவர் அப்போது பாராட்டினார். கருத்தரங்கின் இறுதியாக பேராசிரியர்‌ (வனவியல்‌) முனைவர்‌ கே. பரணிதரன்‌ நன்றியுரை ஆற்றினார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...