அண்ணா நினைவு தினம் - நீலகிரி எம்.பி ஆ.ராசா அலுவலகத்தில் திமுகவினர் மலர் தூவி மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி உதகை நகர திமுக சார்பில் நீலகிரி எம்.பி ஆ.ராசா அலுவலகத்தில் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


நீலகிரி: பேரறிஞர் அண்ணாவின் 54 வது நினைவு நாளை முன்னிட்டு எம்.பி ஆ.ராசாவின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு நாளையொட்டி நீலகிரி மாவட்ட திமுக சார்பில் அவரது திருவுருவ சிலைக்கும், படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதேபோல், உதகை நகர திமுக சார்பில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



இதனை தொடர்ந்து ஹில் பங்க் பகுதியில் உள்ள நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் அலுவலகத்தில் அண்ணாவின் உருவ படத்திற்கு உதகை நகர திமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், உதகை நகர திமுக செயலாளர் ஜார்ஜ், ஆ.ராசாவின் நேர்முக உதவியாளர் நந்தி ரவி, மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேஷ், நகர கழகத் துணைச் செயலாளர்கள் கார்டன் கிருஷ்ணன், முன்னாள் மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர் ரவீந்திரன், நகர்மன்ற உறுப்பினர்கள் செல்வராஜ், வனிதா, மேரி பிளோரினா, பிரியா, கழக நிர்வாகிகள் மஞ்சு குமார், குழந்தைநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...