திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுவதாக வெளியான தகவல் தவறானது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மறுப்பு

திமுக இளைஞர் அணியின் மாநில, மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் கோவை பாப்பம்பட்டி பிரிவில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை வரவேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த தீர்ப்பினை 27.09.2014 அன்றே வெளியிட்ட பெங்களுர் நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹாவிற்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் ஜல்லிகட்டிற்காக போராடிய இளைஞர்கள், மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கும், விவசாயிகள் மரணத்தில் ஆளும்கட்சியின் அலட்சியப்போக்கிற்கும், பவானி, பாம்பாறு ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டப்படுவதை தடுக்காத மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனத்தை தெரிவித்தும், நீட் தேர்விற்கு விலக்களிக்க உடனடியாக குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற வலியுறுத்தல், உதய் மின் திட்டத்தால் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் ரத்தாக கூடாது என்பன உள்ளிட்ட 11 தீர்மானங்களும் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலினிடம், அதிமுக துணை பொதுச் செயலாளராக தினகரன் தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது மற்ற கட்சிகளில் விவகாரங்களில் தலையிடுவது கிடையாது என தெரிவித்த அவர், திமுக சட்ட மன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று மாலை நடைபெறுவதாக வெளியான தகவலையும் மறுத்தார்.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...