கோவையில் கேரள லாட்டரி விற்பனை - இருவர் கைது, மூவருக்கு போலீஸ் வலைவீச்சு..!

கோவை சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி விற்பனை செய்துவந்த 2 பேரை கைது செய்த போலீசார், ரூ.6.50 லட்சம் பணம், 5 செல்போன்கள் மற்றும் ஒரு காரை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை துடியலூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகளை சிலர் விற்பனை செய்து வருவதாக துடியலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில், கோவை சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் துடியலூர் காவல் உதவி ஆய்வாளர் குருசந்திர வடிவேல் தலைமையிலான காவலர்கள் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் வைத்து சிலர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த வினோத்குமார் மற்றும் அருண் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 6 லட்சத்து 50 ஆயிரம் பணம், 5 செல்போன்கள், 60 லாட்டரி டிக்கெட்டுகள் மற்றும் சொகுசு கார் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில் தலைமறைவாக உள்ள பாலன், பிரதீப், பிரபு உள்ளிட்ட 3 பேரை வலைவீசி தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...