மத்திய பட்ஜெட் ஏமாற்றம் - திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் தகவல்

மத்திய பட்ஜெட்டில் பின்னலாடை துறையை ஊக்குவிக்கும் அளவிற்கு அறிவிப்பு ஏதும் இல்லை, பின்னலாடை துறைக்கு ஏமாற்றமான பட்ஜெட் எனத் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் தகவல்.



திருப்பூர்: மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னலாடை துறை தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளை எதிர்பார்த்து திருப்பூர் தொழில்துறையினர் காத்திருந்ததாகவும் ஆனால் ஏமாற்றமே மிஞ்சியதாகத் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் பட்ஜெட்டில் ஜவுளி துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்த்துக் காத்திருந்த பின்னலாடை துறையினருக்கு இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளதாகத் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம் தெரிவித்துள்ளனர்.



இதுகுறித்து அவர் கூறுகையில், சிறு குறு தொழிலுக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது மிகக் குறைந்த அளவு. இதனால் எந்த வித மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்றும், மூலப்பொருள் விலையை நிலையாக வைக்கப் பருத்தி இறக்குமதி வரியை ரத்து செய்யப்படும் என எதிர்பார்த்தோம்.

இதேபோல் வங்கி கடன்‌ உதவிகள் குறித்த அறிவிப்புகளை எதிர்பார்த்தோம். ஆனால் இது தொடர்பான எந்த வித அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. மேலும் பஞ்சு ஏற்றுமதி தடை தொடர்பாகவோ, பஞ்சு இறக்குமதி வரி தொடர்பாகவோ எந்த அறிவிப்பும் இல்லை என்றும், நூல் விலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அறிவிப்பு இல்லை என்பதும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

பல வருட கோரிக்கையான பின்னலாடை துறைக்குத் தனி வாரியம் தேவை என்பதும் நிறைவேற்றப்படவில்லை என்பதுடன், பின்னலாடைக்கு மகிழ்ச்சி தரும் பட்ஜெட்டாக இல்லை, தொழில் நகரத்தின் முக்கிய கோரிக்கையான தொழிலாளர்கள் குடியிருப்புகள் தொடர்பாக அறிவிப்பு, நிட்வேர் போர்டு அறிவிப்பு போன்றவைகளையும் எதிர்பார்த்திருந்த நிலையில் இது தொடர்பான எந்த அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. ஒட்டு மொத்தமாக இந்த பட்ஜெட் பின்னலாடை துறைக்கு ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்துள்ளது என்றார்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...