மத்திய பட்ஜெட் ஏமாற்றம் - திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் தகவல்

மத்திய பட்ஜெட்டில் பின்னலாடை துறையை ஊக்குவிக்கும் அளவிற்கு அறிவிப்பு ஏதும் இல்லை, பின்னலாடை துறைக்கு ஏமாற்றமான பட்ஜெட் எனத் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் தகவல்.



திருப்பூர்: மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னலாடை துறை தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளை எதிர்பார்த்து திருப்பூர் தொழில்துறையினர் காத்திருந்ததாகவும் ஆனால் ஏமாற்றமே மிஞ்சியதாகத் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் பட்ஜெட்டில் ஜவுளி துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்த்துக் காத்திருந்த பின்னலாடை துறையினருக்கு இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளதாகத் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம் தெரிவித்துள்ளனர்.



இதுகுறித்து அவர் கூறுகையில், சிறு குறு தொழிலுக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது மிகக் குறைந்த அளவு. இதனால் எந்த வித மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்றும், மூலப்பொருள் விலையை நிலையாக வைக்கப் பருத்தி இறக்குமதி வரியை ரத்து செய்யப்படும் என எதிர்பார்த்தோம்.

இதேபோல் வங்கி கடன்‌ உதவிகள் குறித்த அறிவிப்புகளை எதிர்பார்த்தோம். ஆனால் இது தொடர்பான எந்த வித அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. மேலும் பஞ்சு ஏற்றுமதி தடை தொடர்பாகவோ, பஞ்சு இறக்குமதி வரி தொடர்பாகவோ எந்த அறிவிப்பும் இல்லை என்றும், நூல் விலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அறிவிப்பு இல்லை என்பதும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

பல வருட கோரிக்கையான பின்னலாடை துறைக்குத் தனி வாரியம் தேவை என்பதும் நிறைவேற்றப்படவில்லை என்பதுடன், பின்னலாடைக்கு மகிழ்ச்சி தரும் பட்ஜெட்டாக இல்லை, தொழில் நகரத்தின் முக்கிய கோரிக்கையான தொழிலாளர்கள் குடியிருப்புகள் தொடர்பாக அறிவிப்பு, நிட்வேர் போர்டு அறிவிப்பு போன்றவைகளையும் எதிர்பார்த்திருந்த நிலையில் இது தொடர்பான எந்த அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. ஒட்டு மொத்தமாக இந்த பட்ஜெட் பின்னலாடை துறைக்கு ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்துள்ளது என்றார்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...