மத்திய பட்ஜெட் ஏமாற்றம் - திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் தகவல்

மத்திய பட்ஜெட்டில் பின்னலாடை துறையை ஊக்குவிக்கும் அளவிற்கு அறிவிப்பு ஏதும் இல்லை, பின்னலாடை துறைக்கு ஏமாற்றமான பட்ஜெட் எனத் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் தகவல்.



திருப்பூர்: மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னலாடை துறை தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளை எதிர்பார்த்து திருப்பூர் தொழில்துறையினர் காத்திருந்ததாகவும் ஆனால் ஏமாற்றமே மிஞ்சியதாகத் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் பட்ஜெட்டில் ஜவுளி துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்த்துக் காத்திருந்த பின்னலாடை துறையினருக்கு இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளதாகத் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம் தெரிவித்துள்ளனர்.



இதுகுறித்து அவர் கூறுகையில், சிறு குறு தொழிலுக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது மிகக் குறைந்த அளவு. இதனால் எந்த வித மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்றும், மூலப்பொருள் விலையை நிலையாக வைக்கப் பருத்தி இறக்குமதி வரியை ரத்து செய்யப்படும் என எதிர்பார்த்தோம்.

இதேபோல் வங்கி கடன்‌ உதவிகள் குறித்த அறிவிப்புகளை எதிர்பார்த்தோம். ஆனால் இது தொடர்பான எந்த வித அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. மேலும் பஞ்சு ஏற்றுமதி தடை தொடர்பாகவோ, பஞ்சு இறக்குமதி வரி தொடர்பாகவோ எந்த அறிவிப்பும் இல்லை என்றும், நூல் விலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அறிவிப்பு இல்லை என்பதும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

பல வருட கோரிக்கையான பின்னலாடை துறைக்குத் தனி வாரியம் தேவை என்பதும் நிறைவேற்றப்படவில்லை என்பதுடன், பின்னலாடைக்கு மகிழ்ச்சி தரும் பட்ஜெட்டாக இல்லை, தொழில் நகரத்தின் முக்கிய கோரிக்கையான தொழிலாளர்கள் குடியிருப்புகள் தொடர்பாக அறிவிப்பு, நிட்வேர் போர்டு அறிவிப்பு போன்றவைகளையும் எதிர்பார்த்திருந்த நிலையில் இது தொடர்பான எந்த அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. ஒட்டு மொத்தமாக இந்த பட்ஜெட் பின்னலாடை துறைக்கு ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்துள்ளது என்றார்.

Newsletter

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...