வால்பாறை சுப்ரமணியசாமி கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கிய தைப்பூச திருவிழா

வால்பாறையில் உள்ள சுப்ரமணிய சாமி கோவிலில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியுள்ள நிலையில், முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வரும் பிப்.4ஆம் தேதி நடைபெற உள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுப்பிரமணிய சாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி உள்ளது.

வால்பாறையில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் 18 ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழா இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண நிகழ்வு வரும் பிப்ரவரி 4ஆம் தேதி மாலை 6 மணி நடைபெற உள்ளது.

இதனை தொடர்ந்து 5ஆம் தேதி காலை 9 மணிக்கு வால்பாறை ஓம் சக்தி வழிபாடு, மன்ற குழுவினர் சார்பில் பால்குட தீர்த்தம் கொண்டு வரப்பட்டு காலை 10:00 மணிக்கு அபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளன.

இதையடுத்து நல்லகாத்து எஸ்டேட் பாலத்தில் இருந்து முருக பக்தர்கள் அழகு பறவை காவடி எடுத்து நகரின் முக்கிய வீதி வழியாக கோவிலுக்கு சென்று 11 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் மாலை 5 மணிக்கு அலங்காரத்துடன் வள்ளி, தெய்வானை தேவியுடன் முருகன் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.



இந்நிலையில், தைப்பூச விழா இன்று கொடி ஏற்றத்துடன் துவங்கி உள்ள நிலையில், திருக்கல்யாண நிகழ்வுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் விரைவாக செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...