உடுமலை அருகே சிதிலமடைந்து காணப்படும் மின்கம்பம் - அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் மாற்ற கோரிக்கை

உடுமலை - தாராபுரம் சாலையில் ஆபத்தான நிலையில் சிதிலமடைந்துள்ள மின்கம்பத்தை அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்னதாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்சார வாரியத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை - தாராபுரம் சாலையில் ஆபத்தான நிலையில் சிதிலமடைந்து காணப்படும் மின்கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



உடுமலை-தாராபுரம் சாலையின் ஓரத்தில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் ஒன்று சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்த மின் கம்பத்தில் கான்கிரீட் உடைந்தும், வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால், எப்போது விழுமோ என்ற அச்சத்துடனேயே பொதுமக்கள் அப்பகுதியை கடந்து செல்லும் சூழல் நிலவி வருகிறது.



அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் மற்றும் பொது மக்கள் கடந்து செல்லும் முக்கிய சாலையில் உள்ள இந்த மின் கம்பம் உடைந்து விழுந்தால் மிகப்பெரிய அபாயம் ஏற்படும் சூழல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால், இந்த மின் கம்பத்தை உடனடியாக அகற்றி விட்டு புதிய மின் கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்சார வாரியத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...