கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு தடையை மீறி அஞ்சலி செலுத்திய பாஜகவினர் கைது

கோவை குண்டுவெடிப்பு தினத்தை முன்னிட்டு பலியானவர்களுக்கு தடையை மீறி அஞ்சலி செலுத்திய பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



கோவையில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 54 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பத்தில் பலியானவர்களுக்கு ஆண்டுதோறும் இந்து அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ஆர்.எஸ் புரம் பகுதியில் பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக வந்து மலர் அஞ்சலி செலுத்தினர். இதில் பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன், மத்திய தென்னை வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் நினைவுத்தூண் அமைக்க வேண்டுமென பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் வலியுறுத்தினார். மேலும் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலைவழக்கில் குற்றவாளிகளை காவல் துறையினர் கைது செய்யாமல் காலதாமதம் செய்வது வெட்கக்கேடு எனவும், தமிழக அரசியலில் உள்ளவர்கள் ஆவியை பார்த்து பயப்படுவது போல காவியை பார்த்து பயப்படுவதாகவும் கூறிய அவர், வருங்காலங்களில் தமிழகத்தில் காவி கொடி பறந்தேதீருமெனவும் தெரிவித்தார். இதையடுத்து தடையை மீறி அஞ்சலி செலுத்திய தமிழிசை சவுந்திரராசன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...