தேங்காய் உரிக்கூலியை குறைத்து வழங்க தேங்காய் வியாபாரிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

கோவை பொள்ளாச்சியில் நடைபெற்ற தேங்காய் வியாபாரிகள் ஆலோசனை கூட்டத்தில் தேங்காய் விலை வீழ்ச்சி எதிரொலியாக உரிக்கூலியை குறைத்து வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற தென்னை விவசாயிகள், தேங்காய் வியாபாரிகள் ஆலோசனை கூட்டத்தில் தேங்காய் உரிக்கூலியை குறைத்து வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அடுத்த கெடிமேடு பகுதியில் தென்னை விவசாயிகள் மற்றும் தேங்காய் வியாபாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி, உடுமலை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தேங்காய் விலையில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் தென்னை விவசாயிகள் மற்றும் தேங்காய் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1) தேங்காய் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட போது உரிக்கூலியாக தேங்காய்க்கு 82 பைசா வழங்கப்பட்டது. தற்போது விலை வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளதால் 70 பைசாவாக குறைத்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தொழிலாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

2) மத்திய அரசு கொப்பரை தேங்காய்க்கு ஆதார விலையாக 150 ரூபாய் வழங்க வேண்டும்.

3) தேங்காய் எண்ணெய் தயாரிப்பு ஆலைகளை தமிழகத்தில் உருவாக்கி நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்

இவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...