தேங்காய் உரிக்கூலியை குறைத்து வழங்க தேங்காய் வியாபாரிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

கோவை பொள்ளாச்சியில் நடைபெற்ற தேங்காய் வியாபாரிகள் ஆலோசனை கூட்டத்தில் தேங்காய் விலை வீழ்ச்சி எதிரொலியாக உரிக்கூலியை குறைத்து வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற தென்னை விவசாயிகள், தேங்காய் வியாபாரிகள் ஆலோசனை கூட்டத்தில் தேங்காய் உரிக்கூலியை குறைத்து வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அடுத்த கெடிமேடு பகுதியில் தென்னை விவசாயிகள் மற்றும் தேங்காய் வியாபாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி, உடுமலை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தேங்காய் விலையில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் தென்னை விவசாயிகள் மற்றும் தேங்காய் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1) தேங்காய் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட போது உரிக்கூலியாக தேங்காய்க்கு 82 பைசா வழங்கப்பட்டது. தற்போது விலை வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளதால் 70 பைசாவாக குறைத்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தொழிலாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

2) மத்திய அரசு கொப்பரை தேங்காய்க்கு ஆதார விலையாக 150 ரூபாய் வழங்க வேண்டும்.

3) தேங்காய் எண்ணெய் தயாரிப்பு ஆலைகளை தமிழகத்தில் உருவாக்கி நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்

இவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கோரி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம், ஓய்வு வயது உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ...

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...