கோவையில் குடிபோதையில் மாமியாரை தாக்கிய மருமகன் மீது வழக்கு!

கோவை சின்னவேடம்பட்டியில் குடும்பத் தகராறில் குடிபோதையில் மாமியாரை தாக்கிய மருமகன் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு.


கோவை: கோவையில் குடிபோதையில் மாமியாரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடிய மருமகனை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி மலர்விழி (48). இவரது மகளை நாகராஜ் என்பவர் திருமணம் செய்துள்ளார். அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

மருமகன் நாகராஜ் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று மதுபோதையில் வீட்டுக்கு வந்த நாகராஜ் மீண்டும் அவரது மனைவியை தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனை மாமியார் மலர்விழி தட்டிக்கேட்டதால், அவருக்கும் நாகராஜ்-க்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மலர்விழியை நாகராஜ் கடுமையாக தாக்கி அவதூறாக பேசியதோடு வீட்டை விட்டு வெளியே தள்ளியுள்ளார். மீண்டும் அவரை கொடூரமாக தாக்கியதில் பலத்த ரத்த காயத்துடன் மலர்விழி மயங்கினார்.

இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் மலர்விழி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் மருமகன் நாகராஜ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Newsletter

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...