வால்பாறையில் மனிதநேய வார விழா கொண்டாட்டம் - பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்பு!

கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு கலைக் கல்லூரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக மனித நேய வார விழா நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அரசு கலை கல்லூரியில் மனித நேய வார விழா நடைபெற்றது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி மக்கள் நலத்துறை சார்பாக பொள்ளாச்சி மற்றும் வால்பாறை பகுதியில் இந்த விழா நடத்தப்பட்டது.



இதில், ஆதிதிராவிடர் நல பள்ளி மற்றும் பழங்குடியினர் பள்ளி என 9 பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் இணைந்து சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் விழாவில் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.



விழாவின் ஒரு பகுதியாக, பள்ளி குழந்தைகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மனித நேயத்தை பற்றி நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சார் ஆட்சியர் தலைமையில் 6 பழங்குடி மக்கள் வாழும் கிராமங்களில் மக்கள் குறை திறப்பு முகாம் நடைபெற்றது.



வன பகுதியில் செல்ல சாலை வசதி வேண்டும். பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வேண்டும்,பழங்குடி கிராமங்களுக்கு மின் இணைப்பு வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, சார் ஆட்சியரிடம் பழங்குடி மக்கள் மனு அளித்தனர். பின்னர் பேசிய சார் ஆட்சியர், பழங்குடியின மக்களின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்படும், என்றார்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...