உடுமலை அருகே பயணிகள் நிழற்குடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் சாலைமறியல் - பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த கொழுமம் பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் விவகாரத்தில் பாஜக - திமுக இடையே மோதல் ஏற்படும் சூழலில் பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மடத்துக்குளம் அருகே உள்ளது கொழுமம் ஊராட்சி. இந்த பகுதியில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகள் தொடங்கியது.

இந்நிலையில், அப்பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டால் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படும் எனக்கூறி பா.ஜ.க.வினர் தடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து குமரலிங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பொதுமக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த விடாமல் பாஜக-வினர் இடையூறு செய்வதாக கூறி திமுகவினர் சார்பிலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவானதாக தெரிகிறது.

இதனிடையே திருப்பூர் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தேன்மொழிவேல் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.



மேலும் மடத்துக்குளம் தாசில்தார் செல்வி சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தார்.



இதனையடுத்து பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகள் தொடங்கியது.



இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்கலம் ரவி தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், உடுமலை நகரச் செயலாளர் கண்ணாயிரம் உள்ளிட்ட பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி தனியார் திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.



இதனையடுத்து அவர்களிடம் தாசில்தார் செல்வி பேச்சுவார்த்தை நடத்தினார்.



அப்போது, உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இறுதி முடிவு எடுக்கும் வரை பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இருதரப்பினரும் அடுத்தடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இருதரப்பினரும் ஒன்று திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...