திருப்பூரில் புத்தகத் திருவிழா - புத்தகங்களை வெளியிட்ட பள்ளி மாணவர்கள்!

திருப்பூர் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு பாரதி புத்தகாலயம் பதிப்பகத்தின் சார்பில் சிறுவர்களுக்கான 50 புத்தகங்களை மாணவ, மாணவிகள் வெளியிட்டனர்.



திருப்பூர்: புத்தகத் திருவிழாவில் பாரதி புத்தகாலயம் சார்பில் சிறார்களுக்கான புத்தகங்கள் வெளியீடு விழா நடைபெற்றது.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் ட்ரஸ் சார்பாக 19ஆவது புத்தகத் திருவிழா, காங்கேயம் சாலையில் உள்ள வேலன் ஹோட்டல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

புத்தகத் திருவிழாவின் இரண்டாவது நாள் நிகழ்வான இன்று பாரதி புத்தகாலயம் சார்பில் சிறார்களுக்கான புத்தகங்கள் வெளியீடு விழா நடைபெற்றது.



இதில் திருப்பூரைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு 50 புத்தகங்களை 50 மாணவ, மாணவிகள் வெளியிட அதனை 50 மாணவ, மாணவிகள் பெற்றுக் கொண்டனர்.



புத்தகங்களை வெளியிட்ட மாணவர்கள், புத்தகங்களை ஏற்கனவே படித்து புத்தகத்தின் சிறப்பம்சங்கள் குறித்துப் பேசினர். இதில் மாணவ,மாணவிகளுக்கான கதை சொல்லி நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...