ஈரோடு இடைத்தேர்தலுக்கு பிறகு யார் கட்சி என்று தெரியும்..! - ஒபிஎஸ் அணி அமலன் சாம்ராஜ் பதிலடி!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் யார் கட்சி, குழு என்பது இடைத் தேர்தலுக்குப் பிறகு தெரிந்து விடும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி துணைச்செயலாளருமான அமலன் சாம்ராஜ் பிரபாகரன் பதிலடி.


சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்குப் பிறகு யாருக்குக் கட்சி எனத் தெரிந்து விடும் என எம்ஜிஆர் இளைஞரணி துணைச்செயலாளருமான அமலன் சாம்ராஜ் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில், ஓபிஎஸ் அணியைச் சார்ந்த எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் அமலன் சாம்ராஜ் பிரபாகரன் ஓபிஎஸை சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஓபிஎஸ் அணி என்பது ஒரு குழு, கட்சி அல்ல என கூறியிருந்ததற்கு, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகாக யார் அணி, கட்சி, குழு என்பது தெரிந்துவிடும்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்ஜிஆருக்குத் திண்டுக்கல் தொகுதி மாற்றத்தைக் கொடுத்தது போல், இபிஎஸுக்கும் ஈரோடு கிழக்கு மாற்றத்தைக் கொடுக்கும் என சொல்லி இருப்பது எல்லோரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது. கோடு போட்ட பூனைகள் எல்லாம் புலியாகி விட முடியாது.

விரைவில் தங்கள் தலைவர் ஓபிஎஸ் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு, தகுதி உள்ள வேட்பாளரை அறிவிப்பார், அவர்தான் வெற்றி வேட்பாளராக இருப்பார் என்றார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...