திருப்பூர் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் - ரூ.74.39 லட்சம் விற்பனை

திருப்பூர் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்திக்கான மறைமுக ஏலத்தில், 970.76 குவிண்டால் அளவிலான பருத்தி ரூ.74.39 லட்சத்துக்கு வியாபாரிகள் ஏலம் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி விற்பனைக்கான மறைமுக ஏலம் நடைபெற்றது.

இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களை சேர்ந்த 327 விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பருத்திகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

பருத்தியை கொள்முதல் செய்வதற்கான நடைபெற்ற இந்த மறைமுக ஏலத்தில் திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம் மற்றும் கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும், பங்கேற்றனர்.

இந்த மறைமுக ஏலத்தில் பருத்திக்கான அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.8,662-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், குறைந்தபட்ச விலையாக ரூ.6,400க்கும், சராசரி விலை ரூ.7,900க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த ஏலத்தில், 2945 மூட்டைகளில் கொண்டு வரப்பட்ட 970.76 குவிண்டால் அளவிலான பருத்தி, 74 லட்சத்து 39ஆயிரத்து 959 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது.

இந்த மறைமுக ஏலத்தில் 9 வியாபாரிகள் கலந்து கொண்டதாக திருப்பூர் விற்பனை குழு முதுநிலை செயலாளர் (பொறுப்பு) கண்ணன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...