தாராபுரத்தில் பராமரிக்கப்படாத 2,250 கிலோ நெல் விதைகளை விற்க தடை!

தாராபுரம் பகுதியில் உள்ள தனியார் நெல் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்த ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி, முறையாக பராமரிக்கப்படாத 2,250 கிலோ நெல் விதைகளை விற்பனை செய்ய தடை விதித்து உத்தரவிட்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள தனியார் நெல் விதை விற்பனையகங்கள், விற்பனை நிலையங்களில் ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி ஆய்வு செய்தார்.

அப்போது விற்பனை உரிமம், இருப்பு மற்றும் விலை விவர பலகை, கொள்முதல் பட்டியல், பதிவேடுகள், பதிவுச் சான்றிதழ், முளைப்பு திறன் பரிசோதனை முடிவு அறிக்கை போன்றவை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில், விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ள குடோன்களில் ஆய்வு செய்த போது, விதை இருப்பிற்கும், பதிவேடு இருப்பிற்கும் வேறுபாடு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து ரூ.72 ஆயிரம் மதிப்பிலான 2,250 கிலோ எடை அளவிலான நெல் விதைகளை விற்பனை செய்ய தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் விற்பனை உரிமம் பெறாமல் விற்பனை செய்யும் விற்பனை நிலையங்கள் மற்றும் நாற்று பண்ணை உரிமையாளர்கள் மீது விதை சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

விவசாயிகளுக்கு பட்டத்திற்கு (காலம்) ஏற்ற ரகங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். விதிமீறல்கள் கண்டறியப்படும் பட்சத்தில் விதை விற்பனையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த ஆய்வின் போது தாராபுரம் மற்றும் காங்கயம் விதை ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...