கூட்டுறவு அங்காடிகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை - கோவை தென்னை விவசாயிகள் கோரிக்கை!

தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடை மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய்யை விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்னை விவசாயிகள் வலியுறுத்தல்.


கோவை: நியாயவிலைக்கடை மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேங்காய் எண்ணெய் மற்றும் அதன் மதிப்பு கூட்டு பொருட்கள் சத்துக்கள் மிகுந்த உணவு பொருட்கள் என மருத்துவ உலகம் தெரிவிக்கின்றது. இந்த நிலையில் மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டு, நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் இது மானியமாக விற்கப்படுகின்றன. வெளிநாடுகளிலிருந்து 72 % எண்ணெய் வித்துக்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதற்கு பெருமளவில் மக்கள் வரிப்பணம் செலவிடப்படுகிறது. இதற்குப் பதிலாக தேங்காய் எண்ணெயை நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும்.



வெளிநாடுகளில் இருந்து தேங்காய் புண்ணாக்கை இறக்குமதி செய்து அதிலிருந்து தேங்காய் எண்ணெய் எடுக்காமல் அராங்கங்களே நேரடியாக தென்னை விவசாயிகளிடமிருந்து தேங்காயை கொள்முதல் செய்து எண்ணை தயாரித்து, கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நியாயவிலை கடைகள் மூலமாக விற்க வேண்டும்.

இதன் மூலம் அந்நிய செலாவணி குறைந்து உள்நாட்டு தென்னை வர்த்தகம் பொருளாதாரம் மேம்படும் என்று தென்னை விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

விலை வீழ்ச்சியால் நஷ்டத்தில் தவிக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் விதமாக, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...