கோவையில் தலைக்கவசம் அணியாமல் பயணம் - 937 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

கோவை மாநகர காவல்துறை சார்பில் மாநகர் முழுவதும் சிறப்பு சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனங்கள் சோதனையிடப்பட்டதில், தலைக்கவசம் அணியாமல் வந்த 937 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக 937 பேர் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை மாநகரில் 100 சதவீத கட்டாயத் தலைக்கவசம் அணிவதை உறுதிப்படுத்தும் வகையில், ஜன.27ம் தேதி மாநகரின் 15 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து இருசக்கர வாகனங்கள் சோதனையிடப்படும் என கடந்த 24ம் தேதி மாநகர காவல்துறை அறிவித்தது.

அதன்படி, நேற்று காலை முதல் மாலை வரை கோவை மாநகர காவல்துறை சார்பில் 15 இடங்களில் சிறப்பு சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனங்கள் சோதனையிடப்பட்டன.



அவற்றில், 1,282 வாகனங்களில் தலைக்கவசம் இன்றி வந்தவர்களில் 937 பேர் மீது போக்குவரத்து சட்டவிதிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 345 பேர் காவல்துறையினரால் எச்சரித்து அனுப்பப்பட்டனர்.

மேலும், தலைக்கவசம் அணிந்து வந்த 2543 பேர் மற்றும் தலைக்கவசம் அணியாமல் வந்த 1282 பேர் என மொத்தம் 3875 பேருக்கு போக்குவரத்து சட்டவிதிகள் பற்றியும், இருசக்கர வாகனங்களில் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்வது குறித்தும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டதாக கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...