கோவை ஆட்சியர் அலுவலகத்தில் சமவாய்ப்பு மையம் - தேசிய சமூக பாதுகாப்பு நிறுவன இயக்குநர் நேரில் ஆய்வு!

கோவையில் சமவாய்ப்பு மையத்தை தேசிய சமூக பாதுகாப்பு நிறுவன இயக்குநர் கிரிராஜ் நேரில் ஆய்வு செய்து, மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவருக்கு கிடைக்கப்பெற்ற வேலைவாய்ப்பு குறித்து கேட்டறிந்தார்.


கோவை: தேசிய சமூக பாதுகாப்பு நிறுவன இயக்குனர் கிரிராஜ் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சம வாய்ப்பு மையத்தினை நேரில் பார்வையிட்டார்.

அங்கு ஆய்வு மேற்கொண்ட அவர், தற்போதுவரை மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோருக்கு கிடைக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும், வரும் நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு செயல்கள் குறித்தும் கேட்டறிந்தார்.



மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்த கிரிராஜ், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆகியோர் "பெண் குழந்தைகளை காப்போம்" "பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்ற விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை வெளியிட்டனர்.

இனிவரும் நாட்களில் அரசு அலுவலகங்கள், மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் இந்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...