கோவை ஆட்சியர் அலுவலகத்தில் சமவாய்ப்பு மையம் - தேசிய சமூக பாதுகாப்பு நிறுவன இயக்குநர் நேரில் ஆய்வு!

கோவையில் சமவாய்ப்பு மையத்தை தேசிய சமூக பாதுகாப்பு நிறுவன இயக்குநர் கிரிராஜ் நேரில் ஆய்வு செய்து, மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவருக்கு கிடைக்கப்பெற்ற வேலைவாய்ப்பு குறித்து கேட்டறிந்தார்.


கோவை: தேசிய சமூக பாதுகாப்பு நிறுவன இயக்குனர் கிரிராஜ் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சம வாய்ப்பு மையத்தினை நேரில் பார்வையிட்டார்.

அங்கு ஆய்வு மேற்கொண்ட அவர், தற்போதுவரை மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோருக்கு கிடைக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும், வரும் நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு செயல்கள் குறித்தும் கேட்டறிந்தார்.



மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்த கிரிராஜ், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆகியோர் "பெண் குழந்தைகளை காப்போம்" "பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்ற விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை வெளியிட்டனர்.

இனிவரும் நாட்களில் அரசு அலுவலகங்கள், மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் இந்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...