'ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி-யில் இருந்து விலக்கு' - கோவை தொழில் அமைப்புகள் கோரிக்கை

மத்திய நிதிநிலை அறிக்கையில் 'ஜாப் ஒர்க்' மட்டும் பெற்று தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டும் என்று கோவை தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், கோவை தொழில்துறையினர் தங்கள் எதிர்பார்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு குறு, சிறு தொழில்கள் சங்கத்தின் (டான்சியா) துணைத் தலைவர் சுருளிவேலிடம் கேட்டபோது,



வேளாண் துறையில் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கப்படுவதைப்போல, குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு 6 சதவீத வட்டியில் கடனுதவி வழங்கப்பட வேண்டும். தனி நபர் வருமானவரி உச்சவரம்பை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும்.

ஜிஎஸ்டி திட்டத்தில் 5 மற்றும் 12 சதவீதம் என இரு வகையான வரி விதிப்பு மட்டுமே அமலில் இருக்க வேண்டும். ரயில்வே துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், என்றார்.

கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் (கொசிமா) தலைவர் நல்லதம்பியிடம் பேசியபோது,



இயந்திரம் வாங்குவதற்கு முன்பு வழங்கப்பட்டுவந்த மானியம் 2020-ம் ஆண்டுக்குபின் நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘ஜாப் ஒர்க்’ செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு திட்டத்தில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டும்.

வங்கிகளில் நடப்பு மூலதன கடன்களுக்கு ஏற்கெனவே அறிவித்த 2 சதவீத வட்டி மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். வருடாந்திர விற்பனை அடிப்படையில் 25 சதவீதம் கடனுதவி வழங்கப்படுகிறது. இதை 40 சதவீதமாக உயர்த்த வேண்டும். இறக்குமதியை குறைத்து உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு சிறப்பு மானியம் வழங்கவேண்டும், என்றார்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...