கோவையில் போலி ஆவணம் மூலம் வங்கிக் கடன் பெற்ற வழக்கு - முன்னாள் வங்கி மேலாளர் உட்பட 3 பேருக்கு சிறை!

கோவையில் கனரா வங்கிக்கு இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் வங்கி மேலாளர் உட்பட 3 பேருக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதித்து கோவை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு.


கோவை: கோவையில் போலி ஆவணம் மூலம் வங்கி கடன் பெற்ற வழக்கில் முன்னாள் வங்கி மேலாளர் உட்பட 3 பேருக்கு சிறை தண்டனை விதித்து கோவை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை சாமாளாபுரத்தைச் சேர்ந்தவர்கள் கந்தசாமி மற்றும் மாரப்பன். ஜவுளி தொழில் நடத்திவரும் இவர்கள், விசைத்தறி வாங்குவதாக கூறி போலி ஆவணம் சமர்பித்து ரூ.9.97 லட்சம் கனரா வங்கியில் கடன் பெற்றனர். அந்தத் தொகையை மாற்று தேவைக்காக பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த மோசடி தொடர்பாக, கடந்த 2019ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி, கந்தசாமி, மாரப்பன் ஆகியோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.40,000 அபராதமும், ஆவணங்களை முறையாக ஆராயாமல் கடன் வழங்கியதால் கனரா வங்கிக்கு ரூ.10.20 லட்சம் இழப்பு ஏற்பட காரணமாக இருந்த வங்கியின் மேலாளர் ராமச்சந்திரன் என்பவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும்,ரூ.80,000 அபராதம் விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...