கோவையில் செல்போனை பறித்துச் சென்ற திருடர்கள் - விரட்டிப் பிடித்த இளைஞர்.!

கோவை சாஸ்திரி சாலையில் சென்றுகொண்டிருந்த இளைஞரிடம், இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் செல்போனை பறித்து தப்பமுயன்றபோது, பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.



கோவை: கோவை ப்ரூக்ஃபீல்டில் வேலை செய்து வருபவர் விக்னேஸ்வரன் . இவர் வேலைக்கு செல்வதற்காக ராம் நகர் வழியே சாஸ்திரி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள், விக்னேஸ்வரனின் செல்போனை பறித்து தப்பி ஓட முயன்றுள்ளனர்.

அப்போது, அவர்களை துரத்தி பிடிக்க விக்னேஸ்வரன் முயன்றார். அந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் நண்பர்கள் உதவியுடன் இருசக்கர வாகனத்தை மடக்கிய விக்னேஸ்வரன், செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவரையும் பிடித்து காட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

பிடிபட்ட நபர்களிடம் கார்ட்டூர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், வழிப்பறியில் ஈடுபட்ட முதல் குற்றவாளி வசந்தகுமார் வர்ஷாவில் பணியாற்றக்கூடிய நபர் என்றும், இவர் மீது முன்பே காவல் நிலையங்களில் சில வழக்குகள் நடந்து வருவதும் தெரியவந்தது.

இவருக்கு உதவியாக இருந்த துரைசாமி அண்ணா மார்க்கெட்டில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருவது உறுதிசெய்யப்பட்டது. செல்போன் திருட்டில் பிடிப்பட்ட இருவரும் 19வயதான இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...