துடியலூர் அருகே தனியார் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

துடியலூர் அருகே வி.எஸ்.கே. நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற 74வது குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக துடியலூர் காவல் பயிற்சி உதவி ஆய்வாளர் புவனேஸ்வரி பங்கேற்பு.


கோவை: வி.எஸ்.கே. நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 74வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.



சுதந்திர இந்தியாவின் 74வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர் அருகே வி.எஸ்.கே. நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் குடியரசு தினவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் தேசியக் கொடியினை ஏற்றிவைத்தார். பள்ளி மாணவ மாணவிகள் சுபாஸ் சந்திரபோஸ், வேலுநாச்சியார், பாரதியார், ஜவர்கலால் நேரு, திருப்பூர் குமரன் உள்ளிட்ட தேசத் தலைவர்கள் போன்றும் கல்பனா சாவ்லா, ரோபோட் போன்றும் வேடம் அணிந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.



இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக துடியலூர் காவல் பயிற்சி உதவி ஆய்வாளர் புவனேஸ்வரி கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கி மாணவ மாணவிகளிடம் உரையாற்றினார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...