பல்லடத்தில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் டிராக்டர் பேரணி

பல்லடத்தில் மத்திய அரசின் விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து டிராக்டர் பேரணி. நாடு முழுவதும் விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற கோரி விவசாயிகள் வலியுறுத்தல்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தினர்.



ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பல்லடத்தில் ராயர்பாளையத்தில் இந்த டிராக்டர் பேரணி தொடங்கியது.



அங்கிருந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி 10-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் விவசாயிகள் பேரணியாக சென்றனர்.



அப்போது, குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட உத்தரவாதம் கொடுக்க வேண்டும், எம் எஸ் சாமிநாதன் குழு பரிந்துரையின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்து விவசாய பொருட்களை அரசு கொள்முதல் செய்ய வேண்டும், சிறு குறு நடுத்தர விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த டிராக்டர் பேரணி நடைபெற்றது.



டிராக்டர் பேரணியில், பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம் ஆகிய ஊர்களில் இருந்து 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...