தெப்பக்காடு யானைகள் முகாமில் குடியரசு தினம் - தேசிய கொடிக்கு வணக்கம் செலுத்திய யானைகள்!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் 74 வது குடியரசு தின விழாவில் வளர்ப்பு யானைகளும் கலந்து கொண்டு தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தின.



நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானை வளர்ப்பு முகாமில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் 28 வளர்ப்பு யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இந்த முகாமில் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று தேசிய கொடி ஏற்றபடும். அப்போது வளர்ப்பு யானைகளும் கலந்து கொண்டு வனத்துறை ஊழியர்களை போல மூவர்ண கொடிக்கு மரியாதை செலுத்தும்.



இந்த நிலையில் இன்று 74 வது குடியரசு தின விழா வளர்ப்பு யானைகள் முகாமில் கொண்டாடப்பட்டது.



அப்போது அம்முகுட்டி, சங்கர், பாமா, கிருஷ்ணா உள்ளிட்ட யானைகள் வரிசையாக நின்று தேசியக்கொடி ஏந்தி யானைகள் வரிசையாக அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டது.



பின்னர் வனசரகர்கள்,வனகாப்பாளர், வனவர், வேட்டை தடுப்பு காவலர்கள் அணிவகுத்து நின்று இணை இயக்குநர் வனத்துறையினரின் மரியாதையை ஏற்றுக்கொண்டு தேசியக்கொடியை தேசியக் கொடியை ஏற்றினார். அப்போது அணிவகுத்து நின்ற யானைகள் பிளரியபடி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தின.



இந்த நிகழ்ச்சியில் வனத்துறையினர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து யானைகளுக்கு சிறப்பு உணவு அளிக்கப்பட்டது.இவ்வகழாவில் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தேசிய கொடிக்கு வளர்ப்பு யானைகள் மரியாதை செலுத்தியது அனைவரையும் வெகுவாக கவர்ந்து இருந்தது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...