தெப்பக்காடு யானைகள் முகாமில் குடியரசு தினம் - தேசிய கொடிக்கு வணக்கம் செலுத்திய யானைகள்!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் 74 வது குடியரசு தின விழாவில் வளர்ப்பு யானைகளும் கலந்து கொண்டு தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தின.



நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானை வளர்ப்பு முகாமில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் 28 வளர்ப்பு யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இந்த முகாமில் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று தேசிய கொடி ஏற்றபடும். அப்போது வளர்ப்பு யானைகளும் கலந்து கொண்டு வனத்துறை ஊழியர்களை போல மூவர்ண கொடிக்கு மரியாதை செலுத்தும்.



இந்த நிலையில் இன்று 74 வது குடியரசு தின விழா வளர்ப்பு யானைகள் முகாமில் கொண்டாடப்பட்டது.



அப்போது அம்முகுட்டி, சங்கர், பாமா, கிருஷ்ணா உள்ளிட்ட யானைகள் வரிசையாக நின்று தேசியக்கொடி ஏந்தி யானைகள் வரிசையாக அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டது.



பின்னர் வனசரகர்கள்,வனகாப்பாளர், வனவர், வேட்டை தடுப்பு காவலர்கள் அணிவகுத்து நின்று இணை இயக்குநர் வனத்துறையினரின் மரியாதையை ஏற்றுக்கொண்டு தேசியக்கொடியை தேசியக் கொடியை ஏற்றினார். அப்போது அணிவகுத்து நின்ற யானைகள் பிளரியபடி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தின.



இந்த நிகழ்ச்சியில் வனத்துறையினர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து யானைகளுக்கு சிறப்பு உணவு அளிக்கப்பட்டது.இவ்வகழாவில் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தேசிய கொடிக்கு வளர்ப்பு யானைகள் மரியாதை செலுத்தியது அனைவரையும் வெகுவாக கவர்ந்து இருந்தது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...