கோத்தகிரி அருகே மாடு மேய்க்கச் சென்ற விவசாயி - மறைந்திருந்து தாக்கிய சிறுத்தை!

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே மாடு மேய்க்கச் சென்றவரை, சிறுத்தை தாக்கியதில் படுகாயம். கோத்தகிரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.



நீலகிரி: கோத்தகிரி அருகே சிறுத்தை தாக்கியதில் படுகாயமடைந்தவருக்கு, அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் குடியிருப்பு பகுதிக்கு யானை, கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் வருவது அதிகரித்துள்ளது.



இந்த நிலையில் கோத்தகிரி அருகே கீழ் கோத்தகிரி பரவக்காடு பகுதியில் பன்னீர் செல்வம் (48) என்பவர் இன்று காலை அவரது மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றுள்ளார்.

அப்போது புதரில் மறைந்திருந்த சிறுத்தை ஒன்று பன்னீர் செல்வத்தை தாக்கியது. அவரின் அலரல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஒடி வந்து சிறுத்தையை விரட்டினர்.



படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



பன்னீர் செல்வத்திற்கு கோத்தகிரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...