காரமடை நகராட்சியில் குப்பை அள்ளுவதற்கான ஒப்பந்த தீர்மானம் நிறுத்தி வைப்பு

கோவை மாவட்டம் காரமடை நகராட்சியில் குப்பைகள் அள்ளும் விவகாரத்தில் தனியார் நிறுவனத்திற்குச் சாதகமான ஒப்பந்த தீர்மானம் நிறுத்தி வைப்பு.


கோவை: காரமடை நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற அவசர கூட்டத்தில் துப்புரவுப் பணியாளர்களின் வேலைவாய்ப்பினை பறிக்கும் வகையில் குப்பைகளைச் சேகரிக்கத் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விட அனுமதிக் கோரி கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டது.

கோவை மாவட்டம் காரமடை நகராட்சியின் அவசரக்கூட்டம் நகராட்சி தலைவர் உஷா வெங்கடேஷ் தலைமையில் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த அவசர கூட்டத்தில் ஒரே ஒரு தீர்மானம் மன்ற பார்வைக்கு வைக்கப்பட்டது.

இதில் நகராட்சியில் உள்ள குப்பைகளைச் சேகரிக்க தற்போது 120 தற்காலிக பணியாளர்களும், 30 நிரந்தர பணியாளர்கள் உள்ள நிலையில் அடுத்த மாதம் முதல் காரமடை நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் குப்பைகளைச் சேகரிக்கத் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விட அனுமதி கோரப்பட்டது.



இதனால் ஏற்கனவே பணியில் உள்ளத் துப்புரவுப் பணியாளர்களின் பணி பாதிக்கப்படுவதுடன் கொரானோ காலத்தில் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியற்றியவர்களுக்கே இந்த நிலையா? என அனைத்து கவுன்சிலர்களும், தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தீர்மானம் நிறுத்தி வைக்கபட்டுவதாக நகராட்சி தலைவர் உஷா அறிவித்தார்.

இதனையடுத்து துப்புரவுத் தொழிலாளர்களைச் சந்தித்த நகராட்சி தலைவர் உஷா, அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தொழிலாளர்கள் பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Newsletter

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...