காரமடை நகராட்சியில் குப்பை அள்ளுவதற்கான ஒப்பந்த தீர்மானம் நிறுத்தி வைப்பு

கோவை மாவட்டம் காரமடை நகராட்சியில் குப்பைகள் அள்ளும் விவகாரத்தில் தனியார் நிறுவனத்திற்குச் சாதகமான ஒப்பந்த தீர்மானம் நிறுத்தி வைப்பு.


கோவை: காரமடை நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற அவசர கூட்டத்தில் துப்புரவுப் பணியாளர்களின் வேலைவாய்ப்பினை பறிக்கும் வகையில் குப்பைகளைச் சேகரிக்கத் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விட அனுமதிக் கோரி கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டது.

கோவை மாவட்டம் காரமடை நகராட்சியின் அவசரக்கூட்டம் நகராட்சி தலைவர் உஷா வெங்கடேஷ் தலைமையில் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த அவசர கூட்டத்தில் ஒரே ஒரு தீர்மானம் மன்ற பார்வைக்கு வைக்கப்பட்டது.

இதில் நகராட்சியில் உள்ள குப்பைகளைச் சேகரிக்க தற்போது 120 தற்காலிக பணியாளர்களும், 30 நிரந்தர பணியாளர்கள் உள்ள நிலையில் அடுத்த மாதம் முதல் காரமடை நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் குப்பைகளைச் சேகரிக்கத் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விட அனுமதி கோரப்பட்டது.



இதனால் ஏற்கனவே பணியில் உள்ளத் துப்புரவுப் பணியாளர்களின் பணி பாதிக்கப்படுவதுடன் கொரானோ காலத்தில் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியற்றியவர்களுக்கே இந்த நிலையா? என அனைத்து கவுன்சிலர்களும், தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தீர்மானம் நிறுத்தி வைக்கபட்டுவதாக நகராட்சி தலைவர் உஷா அறிவித்தார்.

இதனையடுத்து துப்புரவுத் தொழிலாளர்களைச் சந்தித்த நகராட்சி தலைவர் உஷா, அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தொழிலாளர்கள் பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...