'தமிழகத்தின் தற்போதைய சூழ்நிலைக்கு பாஜக வின் சூழ்ச்சியே காரணம்' திராவிட விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி பேட்டி.


தமிழகத்தின் தற்போதைய சூழ்நிலைக்கு பாஜக வின் சூழ்ச்சியே காரணம் என கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திராவிட விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்,

பொள்ளாச்சி காளியப்ப கவுண்டன் புதூரில் சுயமரியாதை சமதர்ம இயக்கத்தின் தலைவர் காசு.நாகராசன் ஆதிக்கசாதியினரால் தாக்கப்பட்டதற்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர், இந்த நிலையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் சாதி மதவாத ஆதிக்க எதிர்ப்பு கூட்டியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள் மதவாத ஆதிக்க வன்முறைகளை தடுக்க வேண்டும், அரசும் காவல் துரையினரும் இதற்கு துணை போக கூடாது என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திராவிட விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி தற்போதைய அரசியல் சூழ்நிலை பொறுத்தவரையில் தமிழகத்தில் பாஜக நேரடியாக ஆட்சிக்கு வரமுடியாது என்பதால், இது அவர்கள் செய்யும் சூழ்சி எனவும், முதல்வர் போட்டியில் இருக்கும் இருவர் மீதும் எங்களுக்கு நல்ல நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மத வெறியர்கள் இங்கு காலூன்றுவதற்க்கு எதிரான கருத்தை நாங்கள் பதிவு செய்வோம் என்றார்.

Newsletter

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...