தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி - சாம்பியன் பட்டம் வென்ற திருப்பூர் மாணவர்கள்!

ஈரோட்டில் நடைபெற்ற தென்னிந்திய அளவில் நடந்த கராத்தே போட்டியில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர்.



திருப்பூர்: ஈரோட்டில் தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி நடத்தப்பட்டது. இதில், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஐந்து வயது முதல் 15 வயது வரையான மாணவ - மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்டத்திலிருந்து சுமார் 75க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டனர்.



கத்தா மற்றும் குமித்தே பிரிவில் 13 தங்கம், 26 வெள்ளி, 39 வெண்கல பதக்கங்களை திருப்பூர் மாணவர்கள் வென்றனர். ஓபன் குமித்தே பிரிவில் மூன்று மிதிவண்டிகளை சிறப்பு பரிசாகவும் வென்றனர்.



தொடர்ந்து, கராத்தே சாம்பியன் சிப் பட்டத்தையும் திருப்பூர் மாணவர்களே கைப்பற்றினர். வெற்றி பெற்றவர்களுக்கு திருப்பூர் தெற்கு தொகுதி திமுக எம்எல்ஏ செல்வராஜ் வாழ்த்து தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...