இயற்கை விழிப்புணர்வுக்காக ஊட்டியில் மாணவர்கள் கல்வி சுற்றுலா

நீலகிரி மாவட்ட தேசிய பசுமை படை சார்பில் ஊட்டிக்கு ஒருநாள் இயற்கை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.


நீலகிரி: இயற்கை குறித்த தகவல்களை அடுத்த தலைமுறைக்கு மாணவர்கள் கொண்டு செல்ல வேண்டும் என தேசிய பசுமை படை குன்னூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள கேர்ண்ஹில் காப்புக்காடு, மற்றும் பழங்குடியினர் ஆய்வு மையம் எம் பாலடா ஆகிய இடங்களுக்குத் தேசிய பசுமை படை சார்பாகப் பள்ளி மாணவர்களை ஒருநாள் இயற்கை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டது.



இதில் 20 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களை அழைத்துச் சென்று காடுகள் மற்றும் பழங்குடியின மக்கள் வாழ்க்கை முறை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.



இந்நிகழ்வில் தேசிய பசுமை படை குன்னூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அப்போது, மாணவர்கள் இயற்கை கல்விச் சுற்றுலாவை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு இயற்கை குறித்த தகவல்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய சிபிஆர் சுற்றுச்சூழல் கல்வி மைய கள அலுவலர் குமரவேலு, நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தின் முக்கியத்துவம் அறிந்து கொள்ளவும், இங்கு வாழும் பழங்குடியின மக்களின் கலாச்சாரம், நீலகிரிக்கு உரித்தான தாவரங்கள், அவற்றைப் பாதுகாப்பதன் அவசியம் ஆகியவற்றை மாணவர்கள் தெரிந்து கொள்ள இது போன்ற சுற்றுலா அமையும் என்றார்.

வனவர் மேகர் நிஷா பேசுகையில், பிளாஸ்டிக் வனப்பகுதியில் வீசி எறிவதும், வனவிலங்குகளுக்கு உணவளிப்பதும் தவிர்க்க வேண்டும் என்றார்.

இதேபோல் நீலகிரி மாவட்ட இயற்கை விவசாய செயலாளர் ராமதாஸ் பேசுகையில், அதிக பூச்சிக்கொல்லி மருந்துகளால் சோலை வனப்பகுதிகளும் மூலிகை மற்றும் அரிய தாவரங்களும் அழிந்து வரும் அபாயத்தில் உள்ளது என்றார்.

இதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு வனப்பகுதியில் நீர் நடைப் பயிற்சி, பட்டாம்பூச்சி, பறவைகள், தாவரங்கள் கண்டறிதல், தியானம், பழங்குடியினர் பாரம்பரிய அறிவு கற்பிக்கப் பட்டது.

இந்நிகழ்ச்சியில் தேசிய பசுமை படை பொறுப்பாசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை தேசிய பசுமை படை குன்னூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வே.சிவதாஸ் செய்திருந்தார்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...